districts

img

அச்சக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்

ஒன்றிய, மாநில அரசுகள் பேப்பர் மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரியும், அச்சகத்துக்கு 5 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவண்ணாமலை மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எம்.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார், அகில இந்திய அச்சக உரிமையாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோகன், தமிழ்நாடு அச்சக சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் துரை குமரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜெய்சங்கர், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம் ஆகியோர் பேசினர்.