திருவண்ணாமலை, நவ.29- முன்னறிவிப்பின்றி விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து விவ சாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - போளூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் சந்திப்பு சாலை முதல் நாராயணபுரம், கோலந்தங்கள், செ.நாச்சிப்பட்டு வழியாக செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள மண்மலை வரை சுமார் 4 கிலோ மீட்டர் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மண்மலை பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணியிலும் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. விவசாயிகளுக்கு எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல், இந்த புறவழிச் சாலைக்கு விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலை துறை யின் நடவடிக்கையை கண்டித்து விவ சாயிகள் கருப்புக் கொடியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட விவ சாயிகளிடம் பேச்சு நடத்தி, இது குறித்து உரிய அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.