districts

img

மலை சங்க கல்வெட்டு திறப்பு விழா

திருவண்ணாமலை, மே. 21- திருவண்ணாமலை மாவட்டம் மல்ல வாடி பகுதியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 30ஆம் ஆண்டு அமைப்பு தினம் கொடியேற்று விழா, கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பலராமன், மாவட்டச் செயலாளர் டி.கே.வெங்கடேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் பி.சங்கர் தலைமை தாங்கினார். தீபா வரவேற்றார்.

;