திருவண்ணாமலை, மார்ச் 16- ஆரணி அருகே நெடுஞ்சாலை ஓரம் மற்றும் ஏரி பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆரணி நகராட்சி எல்லையான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளான ஊசிகள், காலி மருந்து பாட்டில்கள், காலாவதி யான மருந்துகள் மற்றும் ரத்தக்கரை படிந்த பஞ்சுகள் போன்றவை கொட்டப் படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், ஆரணி நகராட்சி பகுதி யில் இயங்கி வரும் ஆட்டு இறைச்சி கடை களில் உள்ள இறைச்சி கழிவுகளை யும் நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்படு வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதை தொடர்ந்து ஆரணி நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகளும் கலக்கப்பட்டு வருவ தாகவும் இதனால் குடிநீர் மாசுபடுவதாக வும் அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர். இந்நிலையில் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.