districts

img

வடக்கில் இருந்து நல்ல செய்தி: பாஜக தோற்பது உறுதி

திருவண்ணாமலை,ஏப்.3- பா.ஜ.க. எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டிற்கு ஜூன் 4-ஆம் தேதி  விடுதலை கிடைத்து விடும் என்றும்  பாஜக தோல்வி அடைய ப்போவது உறுதி என்ற தகவல் வட மாநிலங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலையில் புதன் கிழமை (மார்ச்3) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக வேட்பாளர் களை ஆதரித்து அவர் பேசியது வரு மாறு:

இந்தியாவில் சமூகநீதி நீடிக்க  வேண்டும்! ஜனநாயகம் பாதுகாக் கப்பட வேண்டும்! வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும்! எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும்! அர சியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும்! நம் நாட்டின் பன்முகத்தன்மை தொடர வேண்டும்! அதற்கு முதலில், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! ஏன் என்றால், ”பா.ஜ.க. ஆண்டதும் போதும் – மக்கள் மாண்ட தும் போதும்” என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகிவிட்டார்கள்.

இந்த நல்ல செய்தி, திருவண்ணா மலையில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழு வதும் மட்டுமல்ல – தென்மாநிலங்க ளில் மட்டுமல்ல – வடமாநிலங்களில் இருந்தும் – ஒட்டுமொத்த இந்தியா விலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது! இந்தச் செய்தியை நன்றாக உணர்ந்தி ருப்பது யார் தெரியுமா? தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும், ஏதாவது பொய்யையும், புரளியையும் கிளப்பி – மக்களைக் குழப்பி வாக்கு வாங்க நினைக்குறாரே பிரதமர் மோடி, அவருக்குத்தான் முதலில் தெரியும்! அதனால்தான், இப்போது பயத்தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் I.T. துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நட வடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்! அதேபோல், E.D.யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி.  சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்மதிக்கிறார்… E.D. – I.T. – C.B.I. – இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது R.T.I. யையும் கூட்டணியில் சேர்த்தி ருக்கிறார்.

இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்டதால் – R.T.I. பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளி வித்தை காண்பிக்கிறார். மோடி குழப்ப த்தில் இருக்கிறார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது. மோடி அவர்களே… இது ஏப்ரல் தான்! இன்னும் மே மாதம் இருக்கிறது… ஜூன் மாதம் இருக்கிறது… உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி தெளிந்துவிடும்! பா.ஜ.க. எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டிற்கு விடுதலை கிடைத்துவிடும்! ஜூன் 3 – நம்முடைய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடு தலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப்  பாடுபட்டாரோ – எந்த மதச்சார் பின்மையை உறுதியுடன் நிலை நாட்டினாரோ – ”மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!” என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ – அவற்றைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணியின் வெற்றியை, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

சமீபத்தில் நீங்கள் பார்த்திருப் பீர்கள். வேட்டி-சட்டை எல்லாம் போட்டு, தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருந்தார்! அதிலாவது உண்மை யைப் பேசினாரா? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் என்று பத்தாண்டுகளில் 20 கோடி இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத் தேன் என்று சொல்லியிருந்தார் என்றால் ’சபாஷ்’ போட்டிருக்கலாம்! கருப்புப் பணத்தை மீட்டுவிட்டேன்! அனை வரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போட்டுவிட்டேன் என்ற சொல்லி யிருந்தால், கை தட்டியிருக்கலாம். உழவர்களின் வருமானத்தை இரட் டிப்பு செய்துவிட்டேன். விலைவா சியைக் குறைத்துவிட்டேன். நதிகளை  இணைத்துவிட்டேன். தமிழ்நாட்டு மீன வர்கள் கைதினைத் தடுத்து விட்டேன்.

பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்தி விட்டேன் என்று சொல்லியிருந்தார் என்றால் வாழ்த்தி இருக்கலாம். ஆனால், அந்தப் பேட்டியில் இது எதுவும் இல்லையே! தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கி றேனே! பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி யில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கி றேன்… அதற்கு பதில் சொல்லவில்லை! அந்த பேட்டியில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் - தனக்கும் எந்த  சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்... பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார் கள்!

ஆணவ சிந்தனை கொண்ட நிதியமைச்சர்
ஆணவச் சிந்தனை கொண்ட நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்து விட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்து வட்டிக்காரர் போன்று பேசியிருக் கிறார்கள். அது முதலில் ஒன்றிய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது! ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழ்நாட்டுக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழ்நாடு அரசு தான் திரும்பக் கட்டப்போகிறது. மக்களுக்குப் புரிய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்கிறேன்…

பொதுவாக A.D.B. – K.F.W. மாதிரி யான வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் – அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசின் கணக்கிற்கு வந்துதான் மாநில  அரசுக்கு டிரான்ஸ்பர் ஆகும்! அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்ததாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் – பொருந்தச் சொல்லுங்கள் அம்மை யார் நிர்மலா சீதாராமன் அவர்களே… ஊரை ஏமாற்றத் திருக்குறள் சொல்லா மல் – உளமார ஒரு திருக்குறளைப் படியுங்கள்…

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

ஒன்றிய அரசு நிதி ஒரு ரூபாய்கூட  கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு… மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்…

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட  பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளி யிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவி களைச் செய்திருக்கிறது. மிக்ஜாம் புய லுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை… டெல்டா மாவட்டங் களில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை… இராம நாதபுரம் மாவட்ட வறட்சிக்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை! இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத்தோம்! எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.

வாழைப்பழ காமெடி
நிர்மலா சீதாராமன் அவர்களே… ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள்.. நாள் கணக்கில்தான் உங்கள்ஆட்சி இருக்கிறது… ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள்! நான் மறுபடி யும் தெளிவாகச் சொல்கிறேன்.  நாங்கள் கேட்கும் நிதி, தேசிய பேரிடர்  நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கி றோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக் கிறீர்களே… அந்த நிதியை பாதிக்கப் பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்.

அவர்கள் கொடுத்ததாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண்டிய மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக்காரன் படத்தில் வருமே... வாழைப்பழ காமெடி, அது போன்று… “அதுதான் இது – இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பார்த்தால், அவர்க ளுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது! நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக் குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்தி களில் வந்திருக்கிறது. அதையெல்லாம் அம்மையார் கொஞ்சம் படிக்க வேண்டும்… அதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து, ஏகடியம் - நக்கல் - நையாண்டி - கிண்டல் – கேலி என்று ஆணவமாகப் பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது… பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம் தான் இல்லை! 

இந்தத் தேர்தலைப் பொறுத்த வரைக்கும் – சர்வாதிகாரத்திற்கும் ஜன நாயகத்திற்கும் நடக்கும் தேர்தல்! மதவாதத்திற்கும் - மதச்சார்பின்மை க்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. இழைக்கும் சமூக அநீதிக்கும் – சமூக நீதிக்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. தலைமையிலான சந்தர்ப்பவாதக் கட்சி களுக்கும் – ’இந்தியா’ என்ற கொள்கைக் கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! வெறுப்பாட்சியை அகற்றி, நல்லாட்சியை அமைக்கவுள்ள தேர்தல்! 

யார் ஆளவேண்டும்
நடப்பது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான நாடாளு மன்றத் தேர்தல்! இந்தியா கூட்டணி தான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம்! ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல் - யார் ஆளக் கூடாது என்று சொல்லாமல் - யார்தான் உண்மையான எதிரி என்றே  தெரியாமல் - எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் - கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

ஒரு பக்கம் கூட்டணி முறிந்து விட்டது என்று சொல்வார்; மற்றொரு பக்கம் பா.ஜ.க.வை எதிர்க்க முடி யாது - அது கூட்டணி தர்மம் என்று சொல்வார்! ஆளுங்கட்சியாக இருந்தால் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு, ”எதிர்க்கட்சிகள் அரசி யலுக்காக எதிர்க்கிறார்கள்” என்று சொல்வார். எதிர்க்கட்சியாக மக்களால் ஓரங்கட்டப்பட்ட பிறகு, “எதிர்க்கட்சி ஏன் எதிர்க்க வேண்டும்?” என்று அரசி யல் தத்துவமேதைகளே மயங்கி விழுவது போன்று புதுப் புது தத்து வங்களாகப் புலம்புவார். இப்படிப்பட்ட பழனிசாமி தமிழ்நாட்டிற்கு மட்டும் துரோகம் செய்தவர் மட்டுமல்ல தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்தியவர்!

இப்போது, பிரிந்து போனவர்கள் பா.ஜ.க.வுடன் நேரடி கூட்டணியாகவும், பழனிசாமி - கள்ளக்கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள்! இப்போது, இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் - ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி!

தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதற்குத் துணைபோகும் பா.ம.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு துணைநிற்கப் போகும் இந்தியா கூட்டணி யின் ஒன்றிய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள்! அதற்குத் திருவண்ணா மலை தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கும் - ஆரணி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கும் – உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவைக் காப்பாற்றும்! தமிழ்நாட்டைக் காப்பாற்றும்! எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும்! பாசிசத்தை வீழ்த்த – இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!”

 இவ்வாறு அவர் உரையாற்றினார்.