districts

img

கிராமங்களுக்கு பேருந்து வசதி கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் வட ஆண்டாப்பட்டு, அரசங்குளம், திடீர் நகர்,நம்மியந்தல் மற்றும் தீபம் நகரில்  1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமங்களுக்கு பேருந்து வசதி கேட்டு திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், தலைவர் ஆர்.சரவணன், வட ஆண்டாப்பட்டு பகுதிச் செயலாளர்  அபிமாறன், சுந்தரபாண்டியன், ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.