திருவண்ணாமலை, பிப். 25- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி இருளர் குடியிருப்பில் 22 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. சங்கத்தின் தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.அந்த பகுதியைச் சேர்ந்த தேவி, மகாலட்சுமி, குட்டி, பிரகாஷ் உள்ளிட்ட 22 பழங்குடி இன குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் துணை வட்டாட்சியர் அகத்தீஸ்வரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் அப்துல் காதர், வருவாய் ஆய்வாளர் இப்ராஹிம், கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி, உதவியாளர் அருள்ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.