districts

img

விவசாயிகள் மறியல்

திருவண்ணாமலை, மே 17- கொள்முதல் நிலையத்தில் எடை போடாததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மோட்டூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடை போடாமல் தாமதப்படுத்தி வருவதால் கோபமடைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;