திருவண்ணாமலை,டிச.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா பருவத்தில் முதல் கட்டமாக 11 வட்டங்களில் 22 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் %னவரி 2 முதல் திறக்கப்படும். அதன்படி ஆரணி வட்டத்தில் குன்னத்தூர், தச்சூர், சேத்பட்டில் நெடுங்குணம், நம்பேடு, செய்யாரில் பாராசூர். கீழ்பென்னாத்தூரில் அணுக்குமலை, சோமாசிப்பாடி, திருவண்ணாமலையில் வெளுக்கனந்தல், பெரியகிளாம்பாடி, வந்தவாசியில் மருதாடு, போளுரில் புதுப்பாளையம், குன்னத்தூர், மண்டகொளத்தூர். கலசப்பாக்கத்தில் எலத்தூர், கேட்டவரம்பாளையம், செங்கத்தில் அன்வராபாத், எறையூர், அரட்டவாடி, நாகப்பாடி, வெம்பாக்கத்தில் வட இலுப்பை, தண்டராம்பட்டு ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இந்த நிலையங்களில் நெல் விற்பனைக்கான முன்பதிவு டிச.23 முதல் துவங்குகிறது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றையும் பெற வேண்டும். நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். எனவே இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளி யிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்தி ருக்கிறார்.