திருவண்ணாமலை, மே 25- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் பெருங் குளத்தூர் கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சங்கோதி (55). இவரை இளையாங்கண்ணி கிராமத்திலுள்ள சாதி ஆதிக்க சக்திகளை சேர்ந்த சிலர் அடித்து படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், படுகொலை செய்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் படுகொலையான தலித் முதியவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா, மாநில இளைஞரணி செயலாளர் என். ஏ.கிச்சா, மகளிர் அணி தலைவி தலித் நதியா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் ப.செல்வன், திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.