districts

img

சாலையை சீரமைக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை,அக்.12- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே சாலையில் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாற்றுப் பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கால்நடை மருத்துவ மனை, வாரச்சந்தை மற்றும் மார்க்கெட்டிங் கமிட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையில் ரயில்வே மேம்பால பணிகள் முடி யும் வரை, தற்காலிக மாற்று பாதையை தரமான தார் சாலையாக அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போளூர் ரயில்வே மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் ரவிதாசன் தலைமை தாங்கி னார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், சிவாஜி, ப.கிருஷ்ணமூர்த்தி, இடைக்குழு உறுப்பினர் கோபி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

;