திருவண்ணாலை,அக்.6- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியலில் ரூ.1.60 கோடி வசூலாகியுள்ளது. திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. பிறகு, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.1,60,13,349 ரொக்கம், கிராம் தங்கம், 1.316 கிலோ வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.