திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் கலைத் திருவிழாவை மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தொடக்கி வைத்தார். இதில் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வட்டார கல்வி வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஹெலன்கிரேசி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.