திருப்பூர், மார்ச் 27- திருப்பூர் மாவட்டம் முழுவதும் களி மண், கிராவல் மண் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை யடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை தடுத்து நிறுத்த மாவட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியராவது இதைத் தடுத்து நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிக ளில் கிராவல் மண் எடுப்பதற்கு எவ்வித அனுமதியும் இல்லாமல் கிராவல் மண் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. மடத்துக் குளம் தாலுகா உட்பட்ட கொமரலிங்கம், கணியூர், மெட்ராத்தி ஆகிய பகுதிகளில் இருந்து கல் குவாரிகளுக்கு கல் உடைக்க வழங்கிய அனுமதியை வைத்து களிமண் தினசரி 500 லோடுகளுக்கு மேல் எடுக்கப் பட்டு, டிப்பர் லாரிகளில் செங்கல் சேம்பர் களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மெட்ராத்தி பகுதியில் கிராவல் மண் எடுக்கப்படுகிறது, இதற்கும் கல் குவாரி களின் அனுமதியையே பயன்படுத்து கிறார்கள். அதேபோல் தாராபுரம் தாலுகாவில் கிராவல் மண், களிமண் திருட்டு பகலிர வாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாராபுரத்தில் பொள்ளாச்சிரோடு, பழனி ரோடு, தாசநாயக்கன்பட்டி மற்றும் இரவு நேரங்களில் மட்டும் மணக்கடவு, கொடு வாய் ரோடு, தாயம்பாளையம், குண்டடம் பிரிவு, மேட்டுக்கடை, ஜோதியம்பட்டி, கோனபுரம் பிரிவு ஆகிய பகுதிகளில் தினந் தோறும் மண் கடத்தல் நடைபெற்று வரு கிறது. இதற்கும் கல்குவாரிகளின் அனுமதியையே பயன்படுத்துகிறார் கள். இதில் சில இடங்களில் எவ்வித அனுமதி இல்லாமல் லாரிகளில் கொண்டு செல்லபடுகிறது. தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் தங்களுக்கு “சிறப்பு” அனுமதி கொடுத்துள்ளார் என்று இரவு நேரங்களில் மண் கடத்தும் நபர்கள் கூறி வருகிறார்கள்.
பல்லடம் தாலுகா பொங்கலுரில் பல் வேறு இடங்களில் கிராவல் மண் எடுக்கப் படுகிறது. இதற்கும் எவ்வித அனுமதியும் இல்லை, மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து காரணம்பேட்டையை சுற்றி யுள்ள பகுதிகளுக்கு தினமும் ஐநூறு லோடுகளுக்கு மேல் கொண்டு வரப்படு கிறது. இவற்றிற்கும் முறையான அனுமதி பெறப்படவில்லை. இது போல் காங்கயம், வஞ்சிபாளையம், கீரனூர், படியூர், பெருந் தொழுவு ஆகிய பகுதிகளில் கிராவல் மண் முறைகேடாக வெட்டி எடுக்கப்படு கிறது. ஊத்துக்குளி தாலுகாவில் பல்வேறு ஆய்வுகள் நடந்தும் கிராவல் மண் கடத்தல் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவினாசி, சேவூர் சுற்றியுள்ள கிராம பகுதி களிலும் இதே போல் கிராவல், களிமண் கடத்தல் நடைபெறுகிறது. இம்மாவட்டத் தில் மேற்கூறிய பகுதிகளில் நடக்கும் மண் கடத்தல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களின் துணையோடுதான் நடக்கிறது. தினந்தோறும் போலியாக அனுமதியை தயார் செய்து தமிழக அரசுக்கு பெரும் வரு வாய் இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகளே இதற்குத் துணை போகிறார் கள். இந்த மண் கடத்தலுக்கு புதுக்கோட் டையைச் சேர்ந்த செல்வம், அய்யப்பன் எனும் இருவரின் தலைமையிலான மண் கடத்தல் கும்பல்தான் காரணம் எனக் கூறப் படுகிறது. அவர்களது அலைபேசி எண் களை ஆய்வு செய்தாலே இந்த கடத்தல் தொடர்பான விபரங்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும், இந்த இரண்டு பேருடன் எத்தனை அதிகாரி கள் தொடர்பில் உள்ளார்கள் என தெரிய வரும் என்றும், இயற்கை வள ஆர்வலர் கள் கூறுகின்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இதில் நடவடிக்கை எடுப் பாரா என்றும் விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்ற னர்.