districts

img

உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு!

உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தின் பாதை அமைக்க அனுமதி வழங்கக் கோரிய போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தில், வன உரிமைச் சட்டம் 2006 அடிப்படையில் திருமூர்த்தி மலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை பாதை அமைக்க அனுமதி வழங்கக் கோரி கடந்த 2 நாட்களாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தை மலைவாழ் மக்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்திற்கு, தொடர் ஆதரவு பெருகி வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக திமுக உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், தளி பேரூராட்சி தலைவர் உதயக்குமார் மற்றும் திமுக உடுமலை மத்திய‌ ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தும் இடத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், இப்போராட்டம் குறித்து அமைச்சரிடம் தெரிவிப்பதாகவும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகளையும்  தெரிவித்தனர்.