திருப்பூர், மார்ச்.1- வாவிபாளையம் பகுதியில் சாலைப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் ஆ.சிகாமணி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது,
திருப்பூர் வடக்கு வட் டம் நெருப்பெரிச்சல் கிராமம் பூழுவப் பட்டி நால்ரோடு பகுதியிலிருந்து வாவி பாளையம் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி நடை பெற்று வருகிறது. எட்டு மாதங்களுக்கு முன்பு துவங்கிய சாலை விரிவாக்க பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் அமைப்பதிலும் பாரபட்சம் காட்டப்பட் டுள்ளது. குறிப்பாக வாவிபாளையம் அண்ணமார் கோவிலிலிருந்து கூலிபா ளையம் ரயில்வே மேம்பாலம் செல்லும் சுற்றுச்சாலையான மாநகராட்சி துவக் கப்பள்ளி வரையிலான சாலை அகலப்ப டுத்தும் பணியில் சல்லி எம்.சாண்ட் கலவை கொட்டப்பட்டு சாலையில் பரப் பப்பட்டுள்ளது.
இதிலிருந்து பறக்கும் மண் புழுதிகளால் சாலை முழுவதும் புகை மண்டலமாக மாறி மூச்சுத் திண றலை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது. இது குறித்து நிர்வாகத்திடம் பலமுறை முறை யிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்ப டவில்லை. பொதுமக்கள், வாகனத்தில் செல்பவர்கள், கடை வியாபாரிகள் நலன் கருதி உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நெருப்பெரிச்சல் நடுநிலைப் பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள சாலையில் வேகத்தடை அமைத்து சாலைப் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட் சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் மக்களைத் திரட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.