districts

img

திருப்பூரில் பிரகாஷ் காரத் எழுச்சிப் பிரச்சாரம்

இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று மாலை மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், வேட்பாளர் கே.சுப்பராயன், திமுக சார்பில் டி.கே.டி.நாகராஜ், மேயர் தினேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ரவி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.  முன்னதாக பிரகாஷ்காரத் பொதுக்கூட்ட திடலை வந்தடைந்தபோது, ஏராளமான பெண்கள் மலர்த்தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.