திருப்பூர், பிப்.23 - மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை முத்தூர் சா. பெருமாள்சாமி கவுண்டர் (94) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவினால் வெள்ளியன்று காலை 7:50 மணி அளவில் இயற்கை எய்தினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூரில் வசித்து வந்த அவரது மறைவு செய்தி அறிந்து, மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கட்சி யின் காங்கேயம் தாலுகா குழு செயலாளர் கே.திருவேங்கடசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ் வரன் உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். வெள்ளியன்று மாலை இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.