திருப்பூர், மார்ச் 1- தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான கே.பி. ஜானகி அம்மாள் நினைவு தினம் வெள்ளியன்று திருப்பூரில் கடைப்பிடிக் கப்பட்டது.
திருப்பூர் பி.ஆர்.நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் கே. பி.ஜானகி அம்மாள் உருவப்படம் மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்தது. இந்த நிகழ்வில் ஜனநாயக மாதர் சங் கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரா தேவி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி, மாவட்டத் துணைத் தலைவர் பா. லட்சுமி ஆகி யோர் முன்னிலையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், முதுபெரும் தலைவர் கே.பி.ஜானகி அம்மாளின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற் றினார்.
சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் கே.உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய ச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினரும் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவருமான கே.கணேசன், பல்ல டம் ஒன்றியச் செயலாளர் ஆர். பரமசி வம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பாலன், சிஐடியு சாலையோர வியாபாரி கள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன் உள்ளிட்டோர் பங்கேற்று கே.பி. ஜானகி அம்மாள் படத்துக்கு மலர் தூவி நினை வஞ்சலி செலுத்தினர்.