திருப்பூர், அக்.20- ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூச னிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள் ளதால், திருப்பூருக்கு பூசணிக்காய் வரத்து அதிகரித்துள் ளது. ஆயுத பூஜையின் போது வீடுகள், பனியன் நிறுவனங் கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வாகனங்களுக்கு பூஜை போடுவதற்கு பூசணிக்காய் அதிக அளவில் பயன்ப டுத்தப்படுவது வழக்கம். இதனால் திருப்பூருக்கு தற்போது பெருந்துறை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூசணிக்காய் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை, காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி சந்தை மற்றும் பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, பெரு மாள் கோவில் வீதி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்க ளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவித்து வைக்கப் பட்டுள்ளன. ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பலர் இவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின் றனர். இதேபோல் வெள்ளரி பழமும் பல இடங்களில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகு திகளில் இருந்து செவ்வந்தி பூ வரத்து அதிகரிக்க தொடங்கி யுள்ளது. இதில் செவ்வந்தி நாட்டு ரகம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டு ரகம் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பிற பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜாதிமல்லி ரூ.320, சம்பங்கி ரூ.120, பட்டுப்பூ ரூ.80, அரளி ரூ.220 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ள போதிலும் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இத னால் மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. செவ்வந்தி பூவின் வரத்து அதிகமாக இருப்ப தால் இதன் விலை பெரிய அளவில் உயரவில்லை.