districts

நீரில் மூழ்கி சிறுவன் பலி

அவிநாசி, மார்ச் 1- அவிநாசி அருகே குட் டையில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பரி தாபமாக உயிரிழந்தார். அவிநாசி அருகே ஆலத் தூர் சங்கம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி, ரேவதி தம் பதியரின் மகன் யோகேஷ் (12). இவர் 6ஆம் வகுப்பு  பயின்று வந்தார். சமீபத்தில்   யோகேசை நாய் கடித்தால்  அவர் வீட்டில் இருந்துள் ளார். இவரது தாய் புதனன்று  மதியம்,  வெளியே சென்று விட்டு, மாலை வந்து பார்த்த போது, யோகேஷ் வீட்டில் இல்லாததால், தேடியுள்ளார். பிறகு வீட் டிற்கு அருகே உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று  பார்த்தபோது, அங்கு யோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.  இத்தகவலறிந்து அவி நாசி தீயணைப்புத் துறை யினர் நீரில் மூழ்கிய நிலை யில் இருந்த லோகேஷ் உடலை மீட்டனர். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.