districts

img

குடிநீர் கட்டணத்தை குறைக்க கோரிக்கை

அவிநாசி, ஏப்.8- அவிநாசி பேரூராட்சியில், குடிநீர் கட்டணத்தை குறைக் கக்கோரி பல்வேறு அமைப்பினர் சார்பில் பேரூராட்சி தலைவரிடம் வெள்ளியன்று கோரிக்கை  மனு அளிக்கப் பட்டது. அவிநாசி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந் நிலையில், தற்போது குடிநீர் கட்டணம் பெருமளவு உயர்த் தப்பட்டுள்ளது. இதனால்,பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, ஏப்ரல் மாதத்தில் இருந்து குடிநீர் கட்டணத்தை குறைக்கக்கோரி, பணிநிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழர் பண்பாட்டு கலாச் சாரப் பேரவை, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பேரூராட்சி தலைவர் தன லட்சுமி பொன்னுச்சாமியிடம் கோரிக்கை மனுவை அளித்த னர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.