திருப்பூர், டிச.8- திருப்பூர் ஊத்துக்குளி சாலை, பெரியபாளையத்தில் வெள்ளியன்று கல்லூரி பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் மாணவிகளுக்கு காயம் அடைந்தனர். ஈரோடு தனியார் மகளிர் கல்லூரி பேருந்து திருப்பூ ரில் இருந்து மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஈரோட்டில் உள்ள கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஊத்துக் குளி சாலை பெரியபாளையம் பகுதியில் எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதில் சில மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மாணவிகளை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பத்துக் கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள தாக போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.