திருப்பூர், டிச.11- திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்க ளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் தராத 35 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலா ளர் துறையினர் செவ்வாயன்று நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல் பனியன் கம்பெ னிகளில் செக்கிங் பார்க்கும் உதிவியாளர்க ளுக்கும் இது போல் அமர இருக்கை உள் ளதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொழிலாளர்களின் நலன்கருதி கடை கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி தொழிலா ளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் டிச.2,3,10 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 35 கடை கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. அதில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நின்றுகொண்டே பணியாற் றும் தொழிலாளர்களுக்கு பணிகளுக்கு இடையே அமர ஏதுவாக இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சோத னைகள் மேற்கொண்டு இருக்கை வசதி ஏற்படுத்தி தராத நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகை யில் டிச.2,3,10 ஆகிய தேதிகளில் திருப்பூ ரில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங் களில் தொழிலாளர் துணை ஆய்வாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், முரண்பாடுகள் காணப்பட்ட 35 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பனியன் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், நாட்டிற்கு கோடிக்க னக்கான வருவாய் ஈட்டித்தரும் மாவட்டம் டாலர் சிட்டி திருப்பூர். இதற்கு காரண மான பனியன் கம்பெனி செக்கிங், பேக்கிங் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கு அமர இருக்கைகள் போடுவதில்லை. இப்பணிகளை அமர்ந்தும் செய்ய முடியும்,
இருப்பினும் இருக்கைகள் போடப்படுவ தில்லை. உணவு, தேநீர் இடைவேளை உள்ளிட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்க ளில் அமர்வதற்கு முடிவதில்லை. சற்று நேரம் அமர கூட கழிவறைகளுக்கு செல்ல வேண் டிய சூழல் உள்ளது. ஒரு சில பெறும் நிறுவ னங்களில் கழிவறைக்கு சென்று வர கூட பன்சிங் வைக்க வேண்டும் என கட்டாயம் உள்ளது. மேலும் பாதுகாப்பு பணியாளர்களை வைத்து கழிவறைகளில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் எனவும் கண்காணிக்கப்ப டுகின்றனர்.
பனியன் நிறுவனங்களில் பெண்களே பெரும்பாலும் உதவியா ளர்களாக உள்ளனர். காலை 8.30 மணி முதல் இரவு 7.30 வரை வேலை பார்க்கும் தொழிலா ளர்கள், நாள் ஒன்றுக்கு 8 முதல் 9 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்வ தால், உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்க்கும் 40 வயதை கடந்த தொழி லாளர்கள் சிலருக்கு வெரிகோஸ் நோய் வந்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலா ளர்களின் நலனை கருத்தில் கொண்டு பனி யன் நிறுவனங்களை ஆய்வு செய்து, செங்கிங், பேக்கிங் உள்ளிட்ட பணிகளில் ஈடுப டும் தொழிலாளர்களுக்கும் அமர இருக்கை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.