திருப்பூர், செப்.16 - எல்லா காலத்திலும் தொழிற்சங்கம் ஒரே மாதிரியாக செயல்பட்டதில்லை. பல்வேறு போக்குகளுக்கிடையே தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சரியாக போரா டுவதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கமும், திருப்பூர் மாவட்ட பஞ் சாலை தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து கொடிவழி நூல் அறிமுக விழாவை சனி யன்று நடத்தினர். எழுத்தாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் தலை மையில் நடைபெற்ற இந்த விழாவில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். இவ்விழாவில் நாவலாசிரியர் ம.காமுத்துரை எழுதிய கொடிவழி நூலை அறிமுகப்படுத்தி சிஐடியு மாநிலத் தலை வர் அ. சவுந்திரராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தொழிற் சங்க இயக்கம் என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக செயல்பட்டது இல்லை. ஆரம்ப காலத்தில் தொழிலாளர்கள் சங்கம் வைப்பதற்கு கடும் அடக்குமுறை ஒடுக்கு முறைகளை எதிர்கொண்டு போராட்டங் களை நடத்த வேண்டி இருந்தது. பிறகு சங்கம் வைப்பது என்பதை முதலாளிகள் ஏற்றுக் கொண்டாலும், தொழிலாளர்கள் விரும்பக் கூடிய, அவர்கள் நலன்களை பாதுகாக்க கூடிய சரியான தொழிற்சங்கம் வேண்டும் என் பதற்காக போராட வேண்டி இருந்தது. தொழிற்சங்கப் போராட்டத்தின் போக் கில் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு வித மான போக்குகள், மனநிலைகள், உளவியல் சிக்கல்கள் ஏற்படும். சிலர் விரக்தி அடைந்து உணர்வு குன்றி விடுவார்கள். சிலர் அதிதீவிர முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வார் கள். தொழிலாளர்களின் வாழ்க்கையின் ஊடாக ஏற்படும் பல்வேறு போக்குகளையும் சமாளித்து சரியான நிலைபாட்டிற்கு அவர் களை வழிநடத்திச் செல்ல வேண்டியது தொழிற்சங்க தலைமையின் பொறுப்பும், கடமையும் ஆகும். ஒரு பக்கம் முதலாளிகள், மறுபக்கம் அரசு காவல்துறை இந்த இரண் டையும் சமாளித்துக் கொண்டு தொழிலா ளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சேதாரம் இல்லாமலோ அல்லது மிகக் குறை வான சேதாரத்தோடு கோரிக்கைகளை வென் றெடுக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடி உற்பத்தியை நிறுத்துவது தான் அவர்கள் வெற்றிக்கான சரியான ஒரே வழியாக இருக்க முடியும். அத்துடன் குறிப்பிட்ட தொழிலாளர் கள் மட்டும் போராடினால் போதாது தொழி லாளர்கள் தங்கள் சகோதர அமைப்புகள், விவசாயிகள் என விரிவான ஒற்றுமையை ஏற் படுத்தி ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை பெறுவதன் மூலமாக வெற்றி பெற முடியும். இந்த அடிப்படையான விஷயத்தை எந்த திரிபும் இல்லாமல் நிபுணத்துவத்துடன் எழுத் தாளர் கொடிவழி நூலில் படைத்துள்ளார். இன்றைய காலத்தில் இளம் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்றும் அ. சவுந்திரராசன் கூறி னார். இந்த விழாவில் எச்எம்எஸ் மாநிலச் செய லாளர் டி.எஸ்.ராஜாமணி, சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், எம்எல்எப் மாவட்டச் செயலாளர் மு.சம்பத் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நூலாசிரியர் காமுத்துரை ஏற்புரை ஆற்றினார். முன்னதாக திருப்பூர் மாவட்ட உடுமலை மலைவாழ் மக்கள் பாதைக்காக நடத்திய போராட்டம் குறித்த பாதை என்ற ஆவணப் படத்தின் அறிமுக டீசரை சவுந்திரராசன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் கே.காமராஜ் பெற்றுக்கொண்டார்.திருப்பூர் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.