திருப்பத்தூர். மார்ச் 3 - தினசரி குப்பைகளை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகரத்தில் அனைத்து தெருக்களிலும் நகராட்சி நிர்வாகத்தால் தினசரி அகற்றப்படாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாய மும் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதி காரிகளிடம் புகார் அளித்துன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினசரி குப்பைகளை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை பகுதி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டி.ஜாபர் சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சக்திவேல் துவக்கி வைத்தார். தாலுகா செயலாளர் எம்.காசி, கேசவன். வீரபத்திரன், ஜோதி, ரவி, ஞானசேகரன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.