districts

தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயலும் பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பாபநாசம், செப்.27- தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பாஜக - ஆர்எஸ்எஸ்காரர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜக தனது சனாதன கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித் திட்டங்களை மேற்கொண்டு வரு கிறது. அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்ஸின் முழுநேர ஊழியர்  போல செயல்படுவதும், சனாதனக் கொள்கையையும், அதை செயல்படுத் துவதற்காக உருவாக்கப்பட்ட புதிய  கல்விக் கொள்கையையும் பகிரங்க மாக ஆதரித்து பல கூட்டங்களிலும் பேசி  வருகிறார். நெடுங்கால சிறைவாசிகள் விடுதலை குறித்த கோப்புகளைக் கிடப்பில் போடும் ஆளுநர், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வளர்ப்பதற்கு அதிக  சுறுசுறுப்பைக் காட்டிவருவது குறிப்பிடத் தக்கது. கட்சியில் பதவி பெறுவதற்கும், காவல்துறை பாதுகாப்பு பெறுவ தற்கும், பிரபலமாவதற்கும், அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்கும், தங்கள் இடங்கள் மீதும் வாகனங்கள் மீதும் தாங்களே குண்டுவீசி பலமுறை சிக்கிக் கொண்டு அம்பலமானவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 26.9.2022 தேதியிட்ட முரசொலி நாளேடு இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்திருப்பது பல சந்தேகங்களை உரு வாக்குகிறது.

அண்மைக் காலமாக பாஜக, தமிழகத்தில் அமைதியை சீர்கு லைத்து மதக் கலவரங்களை நடத்தி அரசியல் ஆதாயம் தேடிட தொடர்ந்து முயன்று வருகிறது. பாஜக தலைவராக இருந்த எல். முருகனின் வேல் யாத்திரை முதல் இப் போதைய தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் அரசியல் வரை அனைத் துமே தமிழ்நாட்டின் அமைதியை காவு  கொள்ளும் நோக்கிலேயே நடத்தப்படு கின்றன. திங்களன்று கோவையில் காவல்துறையினர் உட்பட அனைவரை யும் மிரட்டும் வகையில் அண்ணா மலை ஆற்றிய உரையும் இந்த அடிப் படையில்தான் அமைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்குக் கிடைத் துள்ள அனுமதி இவர்களுக்கு கலவர  அரசியலில் மேலும் நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ்-ன்  தமிழக வடிவமான இந்து முன்னணி  மூலம் இதுவரை நடத்தப்பட்ட ஊர் வலங்களில் பெரும்பான்மையானவை கலவர நோக்குடன் நடத்தப்பட்ட வையே. இப்போது ஆர்எஸ்எஸ் நேரடி யாகவே பேரணிகளை நடத்த அனுமதி  பெற்றுள்ள சூழல் மிகவும் கவலைக் குரியதாகும். முஸ்லிம்களிடையே அச்சத்தை விளைவிக்கும் முயற்சிகள் ஒன்றிய  பாஜக அரசாலும், தமிழக பாஜகவா லும், சங்பரிவார கும்பலாலும் தொ டர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ லில், தமிழக அரசு பன்மடங்கு விழிப் போடும் கவனத்தோடும் நடவடிக்கை களை முடுக்கிவிட்டு, பாசிஸ்ட்களை ஒடுக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், சமய நல்லிணக்கம் தழைத்தோங்கும் பூமியான தமிழ்நாட்டின் அமைதியைப் பாதுகாத்திட வேண்டும் என வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  தமிழகத்தின் அமைதியை சீர்குலைக் கும் தீய செயல்களில் ஈடுபடும் உண்மை  குற்றவாளிகளை சரியாக புலனாய்வு செய்து கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;