districts

img

அறுவடைக்குத் தயார் நிலையில் கரும்புகள்

திருநெல்வேலி, டிச.31-  திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன குடியிருப்பு உள்ளிட்ட மேற்குத் தொ டர்ச்சி மலையடிவாரப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கரும்புகள் வளர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன. நன்கு வளர்ந்த கரும்புகளின் முதிர்ந்த தோகைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர். கரும்புகளை எளிதில் அறுவடை செய்யும் வகையில், 8 முதல் 10 கரும்புகளாக குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றாக சேர்த்து தோகையால் கட்டும் பணியை விவ சாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையி லும் செலவு செய்து கரும்பு பயி ரிட்டுள்ளோம். பொங்கல் பண்டி கைக்கு சில நாட்களே உள்ள நிலை யில் கரும்புகளை அரசே கொள் முதல் செய்வதாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறிய விவசாயிகள்,  நெல் கொள்முதல் செய்வது போன்று வட்டார அள வில் கொள்முதல் நிலையங்கள் அமைத்தும் கரும்புகளை கொள் முதல் செய்ய வேண்டும் என்றனர்.