திருநெல்வேலி, பிப்.25- தமிழ்நாடு சட்டமன்ற சபாநாய கர் அப்பாவு நெல்லையில் ஞாயி றன்று செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியதா வது: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப் பினர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக ஊடகம் மூலம் தகவல் அறிந் தேன்.
காங்கிரஸ் கட்சியின் தலைவ ரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இணையம் வாயிலாக கடிதம் ஒன்றை சபா நாயகரான எனக்கும் சட்டமன்ற முதன்மைச் செயலாளருக்கும் அனுப்பியிருந்தார். அதில் விஜய தாரணி எம்.எல்.ஏ இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் படி காங் கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், மாற்றுக் கட்சி யான பாஜகவில் இணைந்துள் ளார். அவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவ டிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.
இதேபோல் பாரதிய ஜனதா கட்சியில் தான் இணைந்து கொண் டதாகவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சட்ட மன்ற விதி 21 படிவம் எப் (F) முழு வதும் பூர்த்தி செய்து முறைப்படி தமது கைப்பட எழுதி இணையம் வாயிலாக எனக்கும் முதன்மைச் செயலாளருக்கும் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி இருந்தார். ஞாயிறன்று காலை விஜயதாரணி என்னை தொலைபேசியில் அழைத்து தான் முறைப்படி கடி தத்தை தனது கைப்பட எழுதி அனுப்பி இருப்பதாகவும் தெரி வித்தார்.
இந்த நிலையில் அதனை முறையாக பரிசீலனை செய்து பார்த்ததில், சட்டமன்ற உறுப்பின ராக உள்ள ஒருவர் தான் பதவி விலகுவதாக தெரிவிக்க சட்ட மன்ற விதியில் உள்ள படிவம் முறையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்; அதனை விஜய தாரணி எம்எல்ஏவும் பூர்த்தி செய்து கைப்பட கடிதத்துடன் அனுப்பி உள்ளதால் பதவி வில கலை ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித் தார்.