districts

img

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் 469 மதிப்பெண் எடுத்து சாதனை

திருநெல்வேலி, மே 6- நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி, கூலித்தொ ழிலாளி, இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை (17) என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர்.  

இவர்களது வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில்  3 பேர் அத்துமீறி நுழைந்து சாதிய  வன்மத்துடன் சின்னத்துரை மற்றும் அவரது  சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உற வினர்கள் மூலம் மீட்கப்பட்டு  நாங்குநேரி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் மேல் சிகிச்சைக்காக  அனுமதிக்கப் பட்டு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. விசாரணை யில் சின்னத்துரையுடன் படித்த சகமாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது.

இந்த கொடூர நிகழ்வு தமிழ்நாட்டில் கடும்  அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற பின் 12-ஆம்  வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவ மனையிலேயே எழுதினார். இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வை எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து மாணவன் சின்னத்துரை கூறு கையில், “பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று 469 மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக் கிறது. பி.காம்.  பட்டப்படிப்பு படித்து பின்னர் சி.ஏ. ஆவதே விருப்பம்” என்றார். 

சின்னத்துரை பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் -71, ஆங்கிலம் - 93, பொருளாதாரம் - 42 ,வணிகவியல்- 84, கணக்குப்பதிவியல் 85,  கணிப்பொறி பயன்பாடு -94 மொத்தம் -469 - பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற மாணவன் சின்னத்துரையை ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

;