districts

img

வெள்ளம் வடிந்தும் இயல்பு நிலை திரும்பாத திருநெல்வேலி

வரலாறு காணாத மழையால் நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், கிராமங்களிலும் புகுந்த வெள்ளம் வடியத்தொடங்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் 
7 பேர் மரணமடைந்தனர். 75 நிவாரண முகாம்களில் சுமார் 3500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட வளி  மண்டல கீழடுக்கு சுழற்சி காரண மாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, தென்காசி, விருது நகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்  டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய  தேதிகளில் கனமழை கொட்டியது.  தாமிரபரணியிலும் சிற்றாறுகளி லும் பெருக்கெடுத்து ஓடிய வெள்  ளம் ஆற்றங்கரையோர குடியிருப்பு கள் மற்றும் கிராமங்களில் புகுந் தது. 36 கிராம ஊராட்சிகள் மற்றும்  2 பேரூராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அங்கு வசித்து வந்த  மக்கள் வெளியேற்றப்பட்டு மண்ட பங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் திங்களன்று மாலை முதல் மழை குறையத் தொடங்கியதால் ஆறுகளில் நீர்வரத்து குறையத் தொடங்கி யது. செவ்வாயன்று (டிச.19) காலை  தாமிரபரணியில் நீர் வரத்து குறைந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்த வெள்ளம் வடியத்  தொடங்கியது. அதைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கிய வெள்ளத்தை இறைத்து வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள். 

நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கியதும் அப்பகுதியில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் மீட்கப்பட்டது. இதேபோல் சி.என்.கிராமம் பகுதியில் சுமார்  80 வயது முதியவர் உடலும் மீட்கப் பட்டுள்ளது. இவர்களது உடலை  சந்திப்பு காவல்துறையினர் கூராய்  வுக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  பேட்டை சுத்தமல்லி பாரதி நகர்  பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலா ளியான வள்ளுவன் (58) நெல்லை  டவுனில் வெள்ள நீரில் சிக்கி உயி ரிழந்தார்.

நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர்  கடற்கன்னி (58). ஆட்டோ ஓட்டுந ரான இவர் குளத்து மறுகால் தண்ணீ ரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட் டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர்.  ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்  டார். செவ்வாயன்று காலை டவுண்  மாதா பூங்கொடி தெருப்பகுதியில்  கடற்கன்னியின் உடல் மீட்கப்  பட்டது. திங்களன்று பாளையங் கோட்டையில் சிவகுமார் என்ப வர் வீடு இடிந்து விழுந்து கட்டிட  இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.  மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயது  மூதாட்டி வீடு இடிந்து உயிரிழந்தார்.  மின்சாரம் தாக்கி மற்றொருவர் திங்களன்று உயிரிழந்தார். 

மாவட்டம் முழுவதும் தாழ் வான பகுதிகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 75 முகாம்  களில் சுமார் 3,500 பேர் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். மாநகர  பகுதியில் மட்டும் 12 நிவாரண  முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. செவ்வாயன்று மழை குறைந்துவிட்டதால் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. சந்திப்பு சிந்துப்பூந்துறை உள்ளிட்ட பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றன. சுமார்  20 படகுகள் மூலமாக பொதுமக்  கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தச்சன்விளையை சுற்றியுள்ள 4 குளங்கள் நிரம்பி மணிமூர்த் தீஸ்ஸ்புரம் பகுதியில் தீக்கதிர்  நெல்லை மாவட்ட செய்தியாளர் விஜயகுமார் வீடு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக் குள் வெள்ளம் புகுந்தது.