districts

img

மாஞ்சோலை தியாகிகளின் 25ஆவது நினைவு தினம்

      திருநெல்வேலி ,ஜூலை 23- மாஞ்சோலை தியாகிகளின் 25 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  செவ்வாயன்று நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மலர் தூவி அஞ்சலி  செலுத்தப்பட்டது.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஊதிய  உயர்வு கோரி மாஞ்சோலை  தேயிலை  தோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணி யாக வந்தபோது அங்கு பாதுகாப்பில்  இருந்த போலீசார் மாஞ்சோலை தேயி லைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது  லத்தி சார்ஜ் செய்ததால் அடிபட்டும் தப்பிக்க குதித்ததால் தாமிரபரணி ஆற்றில் மூழ்கியும் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வருடம் தோறும் ஜூலை 23ஆம் தேதி அன்று கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சிகள்  மற்றும் அமைப்புகள் அஞ்சலி செலுத்தி  வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம் தலைமையில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளருமான கே. சாமுவேல்ராஜ் , மாநிலக் குழு உறுப்பி னர்கள் கே.ஜி.பாஸ்கரன்,பி. கற்பகம், சிபிஎம் மாநில குழு உறுப்பினரும்  மாதர் சங்க மாநில தலைவருமான  வாலண்டினா ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து மலர்  தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ  ஆர்.கிருஷ்ணன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் டாக்டர் ராமகுரு,  சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.மோகன்,  மாவட்டக் குழு உறுப்பினர்கள் கு.பழனி, இரா.நாறும்பூ நாதன், துரை. நாராயணன், முத்து  சுப்பிரமணியன், குழந்தை வேலு, பால சுப்பிரமணியன்,ஜோதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்  தலைவர் மதுபால்  மற்றும்  தி.சந்திர சேகர், காமராஜ் ,வண்ணமுத்து ரஞ்சித்,  காசி ,பாளை செல்வம் உட்பட ஏராள மானோர்  கலந்து கொண்டனர்.