மயிலாடுதுறை, டிச.27 - மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூரில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 7 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போரா ட்டம் நடைபெற்றது. இரவு பகலாக கடுங்குளிரிலும் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந் துக்கொண்டு மாவட்ட நிர்வா கத்தையும், தருமபுரம் ஆதீ னத்தையும் கண்டித்து முழக் கங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவரும், விவசாயியுமான ஏ.ஆர்.சந்தி ரமோகன் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டை, காய்கறிகள், மளிகைப் பொ ருட்களை போராட்ட குழு விடம் வழங்கினார். 7 நாட்க ளாகியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் செவ்வாய்க் கிழமை முதல் மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு முற்றுகை யிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடவுள்ளனர்.