தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி மாணவர் அப்துல் சமீன் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு ரூ.5,000 ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் அப்துல் சமீனை கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சா உள்ளிட்டோர் பாராட்டினர்.