districts

img

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வாலிபர் சங்கம் பொங்கல் விழா

மயிலாடுதுறை, ஜன.19 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடு துறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், சேத்தூர் கிரா மத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பொங்கல் விளையாட்டு விழா கலைநிகழ்ச்சி ஜன.17,18 ஆகிய தேதி களில் நடைபெற்றன. புதனன்று கிளைத் தலைவர் மதிவாணன் தலைமை யில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முன்ன தாக சங்க கொடியை ஒன்றியச் செயலாளர் ஆர்.ஸ்டாலின்  ஏற்றி வைத்தார். போதைக்கு எதிரான சுடர் ஓட்டத்தை சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.காளிமுத்து துவக்கி வைத்தார்.  வியாழனன்று மாலை கிளைச் செயலாளர் பிரேம் குமார் தலைமையில் வெண்மணி கலைக் குழுவின் கலை  நிகழ்ச்சியோடு விழா துவங்கியது. சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான எல்.பி.சரவணதமிழன், மாவட்டச் செயலாளர் அறிவழகன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் விஜயகாந்த் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சிகளை கண்டு  ரசித்தனர்.