திருத்துறைப்பூண்டி, மார்ச் 11 - தமிழகத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திரையரங்கு உரிமையாளர்களிடம் மனு கொடுத்து மிரட்டும் போக்கை கண்டித்தும், இச்செயலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வழக்கறிஞர் சிவசாகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி. ஜோதிபாசு, மாவட்ட பொருளாளர் ஏ.கே.வேலவன் கண்டன உரையாற்றினர். நகர தலைவர் மதன்சிங், ஒன்றிய தலைவர் வீரசேகரன் மற்றும் ஒன்றிய-நகர-கிளை உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.