districts

img

இஸ்ரேலின் இனப் படுகொலையை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 12 -   இஸ்ரேல் நாடு, பாலஸ்தீன மக்கள் மீது  போர் என்ற பெயரில் இனப்படுகொலையை நடத்தி வருவதைக் கண்டித்தும், இந்த தாக்கு தலை உடனே நிறுத்த வேண்டும். பாலஸ்தீன  மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களை  பாதுகாக்க வேண்டும்.  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயு தங்கள் அனுப்புவதை நிறுத்த வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில்  கரூர் தலைமை தபால் நிலைய அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.சதீஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செய லாளர் எம்.தண்டபாணி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர்  சிவா, மாவட்ட துணைச் செய லாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.