districts

img

வாலிபர் சங்கம் பனை விதைகள் நடல்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் உ.சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.விஜய், பி.ரவி, பி.அரவிந்த், கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், அம்மாபேட்டை ஒன்றியம், 88 வடபாதி பகுதியில், புத்தூரான் வாய்க்கால் ஆற்றுப் பகுதியில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.