மயிலாடுதுறை, நவ.4 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் 43 ஆவது அமைப்பு தினத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஐயப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் பவுல் சத்தியராஜ், துணைச் செயலாளர் எம்.குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மணிபாரதி, மாவட்டத் தலைவர் அமுல்காஸ்ட்ரோ ஆகியோர் உரை யாற்றினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை, வைக் கோலை பயன்படுத்தி காகித தொழிற் சாலை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே இயங்கிய ரயில் போக்கு வரத்தை மீண்டும் துவக்க வேண்டும். மயிலாடுதுறையில் ஏற்கனவே இயங்கி வந்த கூட்டுறவு நூற்பாலையை யும், தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் சர்க்கரை ஆலையையும் மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட் டோர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் அருகிலிருந்து பேரணியாக புறப் பட்டனர். இப்பேரணி, பேருந்து நிலையம், தில்லையாடி வள்ளியம்மை நினைவு வளைவு, வேப்பஞ்சேரி சாலை வழி யாக கோயில் வீதி வந்தடைந்தது. பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் உரையாற்றுகையில், “ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பது என காவிரி டெல்டாவை பாலைவன மாக்கும் மோடியின் முயற்சியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வீரஞ்செறிந்த பல கட்ட போராட்டங் களுக்கு பிறகு முறியடித்து, பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதா ரமாக உள்ள நூறுநாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ரூ.98 ஆயிரம் கோடியாக இருந்ததை, ஒன்றிய அரசு ரூ.72 ஆயிரம் கோடியாக குறைத் துள்ளது. உணவு மானியத்தில் ரூ.550 கோடியாக குறைத்துள்ளது. வறுமையில் உள்ள நாடுகள் பட்டிய லில் இந்தியா தற்போது 111 ஆவது இடத்தில் உள்ளதற்கு காரணம் ஒன்றிய பாஜக அரசுதான். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலை யில், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளு நர்களை வைத்து அங்கே அமைதியை சீர்குலைத்து, பதட்டத்தை உருவாக்க லாமா என யோசிக்கிறது ஒன்றிய அரசு. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டின் சுயாட்சியையும், உரிமையையும் பாதிக் கிற, தாய்மொழியை தாக்குகிற வகை யிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.