கரூர், ஜன.23 - கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தூளிபட்டி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் கிளை தலைவர் சரவணன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க குஜிலியம்பாறை ஒன்றியச் செயலாளர் கே.சண்முகவேல் சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். கடவூர் ஒன்றிய கவுன்சிலர் பி.ராமமூர்த்தி, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் பி.பழனிவேல், விதொச வட்டச் செயலாளர் ரவிக்கண்ணன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். தூளிபட்டியில் இருந்து ரெட்டியப்பட்டி செல்லும் தார்ச் சாலையில், ஆராயி தெரு அருகில் மேம்பாலம் அமைக்க வேண்டும். தூளிபட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு எரிமேடை அமைத்து சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். தூளிபட்டியில் தெரு விளக்கு, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகளை பாலவிடுதி ஊராட்சி, கடவூர் ஒன்றிய நிர்வா கம் முழுமையாக செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.