மயிலாடுதுறை, ஜன.18 - தனியார் செல்போன் நிறுவனங்க ளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். 4ஜி, 5ஜி சேவை களை வழங்கி பொதுத்துறை நிறுவன மான பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் “செல்பி வித் பிஎஸ்என்எல்” என்கிற நூதனப் போராட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவ தும் சுவரொட்டிகளை ஒட்டி ஆயிரக்க ணக்கான இளைஞர்கள் நூதனப் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கடை யூரில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.வி, சிங்காரவேலன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ், மாவட்ட தலைவர் டி.சிம்சன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் காபிரியேல், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.வெண் ணிலா, வாலிபர் சங்க ஒன்றிய செயலா ளர் ஐயப்பன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் காளிமுத்து ஆகி யோர் செல்பி எடுத்துக் கொண்டனர். அதே போன்று திருவிளையாட்டம், தெற்குத்தெரு பகுதியில் வாலிபர் சங்க ஒன்றியத் துணைச் செயலாளர் கோஷ்மின் தலைமையிலும், டி.மணல் மேட்டில் மாணவர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையிலும் நடைபெற்ற நூதனப் போராட்டத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று செல்பி எடுத்துக் கொண்டனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவ தும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சி யில் நடந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயேந்தி ரன், தமுஎகச மாவட்ட குழு உறுப்பினர் கே.டி.முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தஞ்சை நகரத்தில் நடைபெற்ற, செல்ஃபி வித் பிஎஸ்என்எல், நூதனப் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் தஞ்சா வூர் மாநகர செயலாளர் யு.காதர் உசைன் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் எஸ்.ஹரி பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில், உதயகுமார், ஷேக் அலாவுதீன், அருண், உதயகுமார், ஷேக் அலாவுதீன், அர்ஜுன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக அருண் குமார் நன்றி கூறினார். ஒரத்தநாடு ஒரத்தநாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் பெர்னாட்சா தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மாஸ்கோ முன்னிலை வகித்தார். மாவட்டத் தலை வர் ஆம்பல் துரை.ஏசுராஜா கண்டன உரையாற்றினார். வாலிபர் சங்க ஒன்றி யக் குழு உறுப்பினர்கள், உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.