districts

img

பேரளம்-அன்னியூர் புதிய சாலை அமைக்கக்கோரி வாலிபர் சங்கத்தினர் - கிராம மக்கள் மறியல்

திருவாரூர், டிச.13- பேரளம்-அன்னியூர் சாலையை புதிய தார்ச்சாலையாக அமைத் திடக்கோரி பேரளம் ரயில்வேகேட் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பேரளம்-அன்னியூர் சாலை 7.5 கிலோமீட்டர் தூரமாகும். இச்சாலையில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக் காமல் கிடப்பில் போடப்பட்டுள் ளது. சாலை அமைக்கக்கோரி சிபிஎம் மற்றும் வாலிபர் சங்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங் கள் நடத்தப்பட்டன. போராட்டத்தின் போது அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடனடியாக சாலை அமைப்பதாக ஒத்துக் கொண்டு, பின்னர் அதனை நிறைவேற்று வதில்லை என்று சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். குண்டும் குழியுமான இச்சாலை யில் அடிக்கடி விபத்தும் நிகழ் கிறது. எனவே புதிய சாலை அமைக் கக்கோரி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பாக  பேரளம் ரயில்வே கேட் அருகே சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்க்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கே.எம்.பாலா தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர்கள் எஸ். சுரேந்தர், எம்.பாலசந்தர், ஜெ.ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையறிந்து போராட்ட இடத்திற்கு வந்த  நன்னிலம் வட் டாட்சியர் செந்தில் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக புதிதாக சாலை அமைக்க ஒப்புக்கொண்டனர்.இதனடிப்படையில் தற்காலிக மாக போராட்டம் விலக்கிக்கொள் ளப்பட்டது. போராட்டத்தில் கிராம பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.