districts

img

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்

புதுக்கோட்டை, டிச.28 - புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவிலை அடுத்த குளத்துக் குடி யிருப்பு பகுதியில் புகையான் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் மைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். புதுக்கோட்டை மாவட் டத்தில் சாகுபடி செய்யப்பட் டுள்ள நெற்பயிர்களை தற் பொழுது பல்வேறு வகை யான நோய்கள் தாக்கி வரு கின்றன. கதிர்விடும் இந்நேரத்தில் புகையான் உள்ளிட்ட நோய்களின் தாக்கத்தால் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நி லையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்த குளத்துக் குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்ப யிர்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் செவ்வாய் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அவர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப்  பொருளாளர் சி.சுப்பிரமணி யன் மற்றும் விவசாயிகள் நோய்களின் தாக்கம் குறித்தும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி யும் கோரிக்கை வைத்தனர்.  விவசாயிகளின் கோரிக் கையை கேட்டுக் கொண்ட அதிகாரிகள் அர சின் கவனத்திற்கு கொண்டு  சென்று உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தனர்.