திருவாரூர், மார்ச் 19 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழ நாலாநல்லூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வ ராஜ் (62). மன்னார்குடி அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ.- எம்.பில்) முது கலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவராக பணி யாற்றினார். பின்னர் 1980 ஆம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்து தன்னை முழு நேர அரசியல் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். அனைத்திந்திய இளை ஞர் பெருமன்றத்தின் செயலாளராக, அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றி யச் செயலாளராக 12 ஆண்டு காலம் பொறுப்பிலிருந்து சிறப்பாக செயல் பட்டார்.
மேலும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக, பின்னர் திரு வாரூர் மாவட்ட ஊராட்சி தலைவ ராக பொறுப்பேற்று செயல்பட்டார். அப்போது விவசாயிகளின் பிரச்சனை யில் தீவிர கவனம் செலுத்தினார். மூணாறு தலைப்பு வெண்ணாறு பிரிவி லிருந்து, பொன்னிரை வரை சுமார் 50 கி.மீட்டர் தூரத்திற்கு, அனைத்து அரசி யல் கட்சியினர், வெகுமக்கள் என 25 ஆயிரம் பேரை ஒரே நாளில் திரட்டி தூர்வாரும் பணியை மேற்கொண் டார். இதற்காக அனைவரின் பாராட்டையும் பெற்றார். தில்லியில் நடைபெற்ற பஞ்யத்து ராஜ் மாநாட்டில் குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதி காரப் பகிர்வு சம்பந்தமாக பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகவும் செயல்பட்டார். தற்போது இரண்டாவது முறை யாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் வெண்பா வழக்கறிஞராகவும், மகன் நண்பா பட்டப்படிப்பும் படித்து வருகின்றனர். எளிய குடும்பத்தில் பிறந்த இவர், செயலாற்றல் மிக்க எளிய தலைவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர். இவர் நாகப்பட்டினம் நாடாளு மன்ற தொகுதியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.