districts

திருச்சி விரைவு செய்திகள்

18 நாட்களுக்குப் பின் அப்பர் சிலைக்கு பூஜை

தஞ்சாவூர், மே 15 - தஞ்சாவூர் அருகே களி மேடு கிராமத்தில் 94 ஆவது  ஆண்டு அப்பர் தேர் திரு விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு துவங்கியது. தொடர்ந்து 27 ஆம் தேதி அதிகாலை தேர் மின் கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பலி யாகினார். சுமார் 14 பேர்  காயமடைந்தனர். இதை யடுத்து பல்வேறு அரசியல்  தலைவர்கள், ஆன்மீகவாதி கள், ஆதீனங்கள் கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து, விபத்து நடந்த  தேரிலேயே ஐம்பொன்னா லான அப்பர் சிலை, 300 ஆண்டு பழமையான ஓவிய மும் சேதமில்லாமல் இருந்த  நிலையில், சனிக்கிழமை இர வோடு 18 நாட்களுக்கு பிறகு,  தேரில் இருந்து எடுத்து,  அப்பர் சிலைக்கு விக்னேஸ் வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம், மஹா லெட்சுமி பூஜை, அஷ்டதிக் பூஜைகள் பிரேவசப்பலி உள்ளிட்ட பரிகார பூஜை செய்து அப்பர் சிலையை மடத்திற்கு கொண்டு வந்த னர். பின்னர் ஞாயிற்றுக் கிழமை (மே 15) அப்பர் சுவா மிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் கிராமமக்கள் அப்பர் சுவா மியை கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து பஞ்சபுராணமான தேவாரம், திருவாசகம் பாடி வழிபட்ட னர்.

பட்டாக்களை வகை மாற்றம் செய்க! பேச்சுவார்த்தையில் உடன்பாடு:  ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பாபநாசம், மே 15 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே நல்லவன்னியன் குடிக்காட்டில் பறவை என்ற இடத்தில்  முன்னாள் ராணுவத்தினர் 45 பேருக்கும், ஏழைக் கூலித் தொழிலாளர்கள் 60 பேருக்கும் 1955 ஆம் ஆண்டு  நிலம் ஒப்படைப்பு செய்யப்பட்டு, 1964 ஆம் ஆண்டு பட்டா  வழங்கப்பட்டு வருவாய்த்துறை மூலம் போக்குவரத்து மாற்றம் செய்ய பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. இவற்றை உடனே போக்குவரத்து மாற்றம் செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மே 17  அன்று பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மே 14  அன்று பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் மதுசூதனன் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. இதில், 1964 ஆம் ஆண்டு முன்னாள் ராணுவத்தி னர் மற்றும் ஏழை கூலித் தொழிலாளர்கள் எவரெவர் பெய ருக்கு பட்டா வழங்கப்பட்டதோ, அதன் அடிப்படையில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை  வைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என வட்டாட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  மேற்படி பணி முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட  கால இடைவெளியில் வட்டாட்சியரை தொடர்பு கொண்டு  விவரம் தெரிந்து கொள்ளலாம் எனவும், வட்டாட்சியரின் தனி கவனத்தின் கீழ் மனுதாரர்களின் கோரிக்கை தொ டர்பாக அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் உரிய ஆணை  பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உறுதி அளித்ததன் பேரிலும், நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தனிப்பிரிவு போலீசார் 17 பேர் இடமாற்றம் 

திருச்சிராப்பள்ளி, மே 15 - திருச்சி புறநகர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள தனிப்பிரிவு போலீசார் எஸ்.பி. சுஜித்குமாரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த தனிப் பிரிவு போலீசார் அசம்பா விதங்கள் நடைபெறு வதற்கு முன்பே தக வல்களை தெரிவிப்பது, போதைப் பொருட்கள் விற்பனை-கடத்தல் உள்ளிட்ட ரகசிய தகவல் களை தெரிவிப்பது போன்ற பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நி லையில் வாத்தலை, காட்டுப்புத்தூர், துவாக் குடி, முசிறி, புலிவலம், சோமரசம்பேட்டை, நவல் பட்டு, சமயபுரம், கொள்ளி டம், மணிகண்டம், ஜம்மு நாதபுரம், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட 17 காவல் நிலையங்களில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு டிஐஜி அறிவுரை

கும்பகோணம்,  மே 15- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), சமூகப் பணிக் குழுமம் மற்றும் உள்தர நிர்ணயக்குழு இணைந்து கல்லூரி மாண வர்களுக்கான விழிப்பு ணர்வு அரங்க நிகழ்வை  நடத்தினர். கல்லூரி  முதல்வர் க.துரையரசன் தலைமை உரையாற்றி னார். திருச்சி மண்டலம், காவல்துறைத் தலைவர் வி.பாலகிருஷ்ணன் கூறு கையில், “கல்லூரி மாண வர்களின் கடமைகள், தலைமைப் பண்பின் முக்கியத்துவம் குறித்தும்,  மாணவர்கள் குறிக்கோ ளுடன் வாழ வேண்டும். இணையப் பாதுகாப்பு (CYBER CRIME) குழுமத் தில் மாணவர்கள் சேர வேண்டும்” எனவும் எடுத்து ரைத்தார்.

சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,  மே 15 -  விழுப்புரம் மண்டலத் தில் பெருமாள் பிள்ளை என்ற நடத்துநர் மதுபோ தையிலிருந்த பயணியால்  தாக்கப்பட்டு உயிரிழந் ததை கண்டித்து தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது  செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழ கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விரல் ரேகை பதிவு: காவலர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், மே 15 - தஞ்சை சரகக் காவல் துறை துணைத் தலைவர் ஏ.கயல்விழி உத்த ரவுப்படி, பணியிடைப் பயிற்சி மைய காவல் துணைக் கண்காணிப்பா ளர் சபாபதி மேற்பார்வை யில், தஞ்சை சரகத் திற்கு உட்பட்ட தஞ்சை,  திருவாரூர், நாகை  உள்ளிட்ட மாவட்டங்க ளில் பணிபுரியும் காவ லர்களுக்கு ஒரு நாள்  சிறப்பு பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. தஞ்சாவூ ரில், மாவட்ட விரல்ரேகை பதிவுக் கூட கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். ஹேமா தலைமையில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 32 காவலர் களுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 40 காவ லர்களுக்கும், நாகை மாவட்டத்தில் 38 காவலர் களுக்கும் என 110 பேருக்கு பயிற்சி வழங்கப் பட்டது.

திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை  தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும்  கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கும்பகோணம்,  மே 15 - தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆதனூரில் நடைபெற்றது. கரும்பு விவ சாயிகள் சங்க மாநில செய லாளர் காசிநாதன் தலைமை  வகித்தார். கூட்டத்தில் திரு மண்டங்குடி கரும்பு விவசா யிகள் ஏராளமானோர் கலந்து  கொண்டனர். அப்போது கரும்பு விவசா யிகள் சங்க மாநிலச் செயலா ளர் காசிநாதன் தெரிவித்ததா வது: “தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள  திருஆரூரான் சர்க்கரை ஆலை, திருமண்டங்குடி, ஏ.சித்தூர் ஆகிய கிராமங் களிலுள்ள ஆலையின் நிலம் 700 ஏக்கர் மற்றும் இதர சொத் துக்கள் குறைந்தபட்சம் சுமார்  ஆயிரம் கோடி ஆகும். இதில் திருமண்டங்குடி உள்ளிட்ட சுமார் 50 கி. மீட்டரை சுற்றியுள்ள கிராமங் களில் இருந்து, விவசாயம் செய்த கரும்புகளை கரும்பு  சர்க்கரை ஆலைக்கு அனுப்பி விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். இந்நிலை யில் போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகள் பெயரில்  வங்கியில் கடன் பெற்று நிர்வாகம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கில் உள்ளது. இந்நிலையில் 2017-18  ஆம் ஆண்டுகளில் நிலுவைத்  தொகையாக சுமார் ரூ.100 கோடியை விவசாயிகளுக்கு தராமல் ஆலை மூடப்பட் டது. ஆனால் தனியார் நிறு வனமான ஹால்ஸ் நிறுவனத் திற்கு, அவசர அவசரமாக ரூ.145 கோடிக்கு ஆலை மாற்றம் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 26.4.2022 அன்று, ஆயிரம் பேர் 2000 மனுக்களை அனுப்பி, தனி யாருக்கு ஆலையை விடா மல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்கக் கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் கடிதம் எழுதினோம்.  ஆனால் தனியார் நிறுவ னம் ரூ.145 கோடிக்கு டெண் டர் எடுத்துள்ளது. அதில் ரூ.80 கோடியை எஸ்பிஐ வங்கிக்கு செலுத்திவிட்டு, மீதமுள்ள ரூ.65 கோடியை, விவசாயிகளுக்கான கரும்பு  பணத்தின் முழு தொகையில்  57 சதவீத தொகையை மட்டுமே 4 தவணையாக (ஒரு  வருடத்தில்) தருவதாக அறி வித்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் சம்பளம் 16 சதவீதமும், வாகன வாடகை ஒரு சதவீதமும் தருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு மாறாக, ஹால்ஸ் நிறுவனம், சில விவசாயிகள் மூலம் முழு  தொகையையும் தருவதாக தவறாக விளம்பரம் செய்வது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவையில் உள்ள முழு கரும்பு பணத்தையும், விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கிக் கடனை அடைக்கவும், எதிர் காலத்தில் மீண்டும் இதே  நிலை நடக்காமல் இருக்க  தமிழக முதல்வர் தலை யிட்டு, தேர்தலின் போது கூறிய வாக்குறுதிப்படி கரும்பு விவசாயிகளை பாது காக்க, திருஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்  என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.

வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கேட்டதால் தற்கொலை இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு  ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்கிடுக!

தமிழக அரசுக்கு  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை,மே 15- வீடு கட்டும் திட்டத்தில் செலவு செய்த தொகையை பெற அதிகாரி லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), வீடுகட்டும் திட்டத்தில் சேர்ந்துள்ளார். சேமிப்பு தொகையை செலவு செய்தும், கடன் வாங்கியும் செலவு செய்த அவர் தவணைத் தொகைக்காக அரசு அலுவலகத்தை அணுகிய போது, ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார். நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் மகேஷ்வரன் மீது புகார் தெரிவித்து, மணிகண்டன் வெளியிட்ட இறுதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அரசு உடனடியாக செயல்பட்டு லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்ய  வேண்டும் என வலியுறுத்துகிறோம். வீடு கட்டும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிக்கு தவணை தொகையை உடனுக்குடன் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், லஞ்சத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும். மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். குடும்பத்தினருக்கு  அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன்,  ஒருவருக்கு, கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்று கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.