தஞ்சாவூர், ஆக.3-
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது உலகத் தமிழ்க் குழந்தைகள் இலக்கிய மாநாட்டின் இலச்சினை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் மூன்றாவது உலகத் தமிழ்க் குழந்தைகள் மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் அயல் நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டையொட்டி, சிறார் இலக்கியப் படைப்புலகம் என்கிற பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.
இதில், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் மருதுபாண்டியர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 75 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கில் சிறார் இலக்கியம் படித்தலும், படைத்தலும், சிறார் களுக்கான கதைகள் உருவாக்கல், சிறார் இலக்கிய நாடகங்கள் மற்றும் சிறார்களே முன்னின்று படைக்கும் படைப்புகள் என்ற பொருண்மை களில் பயிலரங்க அமர்வுகள் நடத்தப்பட்டன.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சந்திரிகா சுப்ரமணியம், எழுத்தாளர் ஹரணி, நாடகவியலாளர் ஆழி. வெங்கடேசன், மூத்த பெண் கவிஞர் இரா. மீனாட்சி ஆகியோர் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினர்.
இப்பயிலரங்கின் நிறைவு விழா புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில், துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்து, மூன்றா வது உலகத் தமிழ்க் குழந்தைகள் இலக்கிய மாநாட்டின் இலச்சினையை வெளியிட்டார். அப்போது, அவர் பேசுகையில், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவருக்கும் ஏற்ற படைப்புகளை உரு வாக்க மூன்றாவது உலகத் தமிழ்க் குழந்தைகள் இலக்கிய மாநாட்டில் வழிவகை செய்யப்படும் என்றார் அவர்.
வளர் தமிழ்ப்புல முதன்மையரும், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவருமான இரா. குறிஞ்சிவேந்தன் நோக்கவுரை ஆற்றி னார். பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், கலைப்புல முதன்மையர் பெ. இளையாப்பிள்ளை, பேராசிரியர் இரா. பழனிவேலு, மக்கள் தொடர்பு அலு வலர் (பொ) இரா.சு. முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.