districts

img

உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி

அரியலூர்/திருச்சிராப்பள்ளி,  அக்.10 - உலக மனநல தினத்தை யொட்டி செவ்வாயன்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.  அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மனநலத் துறை  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், கல்லூரியின் முதன்மையர் முத்துகிருஷ் ணன் பேரணியை தொடக்கி வைத்தார். இப்பேரணி, ராஜாஜி நகர், கல்லூரிச் சாலை, செந்துறை சாலை  வழியாகச் சென்று மீண்டும்  கல்லூரியை வந்தடைந்தது. இதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாண வர்கள் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மன நல விழிப்புணர்வு பேர ணியை மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் கொடிய சைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட செயல்படுத் தும் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.