districts

உலக பாரம்பரிய தின விழா

கும்பகோணம், ஏப்.20-

  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் தாரா சுரத்தில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயிலில் உலக பாரம்பரிய தின விழா  நடைபெற்றது.

  விழாவில், அய்யம்பேட்டை ஓய்வூபெற்ற தலைமை யாசிரியர் என்.செல்வராஜ் தலைமை வகித்து, தாராகர் என்ற தலைப்பில் இக்கோயில் குறித்த கையேட்டை வெளி யிட்டார். புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லூரி பேரா சிரியர் ரவிசந்திரன் சிறப்புரையாற்றினார்.

  இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் டி.அருண் ராஜ் பேசுகையில், தமிழகத்தில் கீழடி அகழாய்வு களுக்குப் பிறகு தொல்லியல் குறித்த புரிதல் மக்களிடம் அதிகமாகி விட்டது. இந்தியத் தொல்லியல் துறை சார்பில்  தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் கடந் தாண்டு முதல் ஆய்வு நடைபெற்று வருகிறது.  

  ஆயிரமாண்டு பழமையான புராதன சின்னங்களைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறைக்கு பல்வேறு சவால்கள் உள்ளது. எனவே, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  தொல்லியல் குறித்து அண்மைக் காலமாக மாணவர் களிடம் அதிக ஈடுபாடு ஏற்பட்டு வருகிறது. புராதனச் சின்னங் களான கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர் பெரிய  கோயில், தாராசுரம் கோயில் பகுதியில் சுற்றி கட்டி டங்கள் கட்ட அனுமதித்தால் பாரம்பரியம் அழிந்து விடும்’’ எனத் தெரிவித்தார்.