திருவாரூர், செப்.15 - உலக திரைப்பட விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திரு வாரூர் மாவட்டக் குழு சார்பாக திருவா ரூர் தைலம்மை தியேட்டரில் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் செய்தியா ளர் சந்திப்பு நடைபெற்றது. உலக திரைப்பட விழாவை யொட்டி, அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் களப்பிரன் செய்தி யாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலக் குழு மற்றும் திருவாரூர் மாவட்ட குழு திரை இயக்கம் சார்பாக உலகத் திரைப்பட விழா செப்டம்பர் 18 ஆம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரை திருவாரூரில் நடை பெறுகிறது. இதற்கான திட்டமிடல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. 8 ஆவது உலகத் திரைப்பட விழா வில் திரையிடப்படும் 5 நாட்களுக்கான 22 திரைப்படத்திற்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் ஆயிரம் என நிர்ண யிக்கப்பட்டு, டிஜிட்டல் வாயிலாகவும் நேரிலும் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. செப்.18 ஆம் தேதி (புதன்கிழமை) காலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகிக் கிறார். வரவேற்பு குழு தலைவர் எழுத்தாளர் ஐ.வி. நாகராஜன் வர வேற்புரை நிகழ்த்துகிறார். திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் எழுத்தா ளர் அய்.தமிழ்மணி நோக்க உரை யாற்றுகிறார். திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றவுள்ளார். மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, நாடா ளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், விவசாயிகள் சங்கத் தின் முன்னாள் மாநிலத் துணைத் தலை வர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் ஏ.தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். திரைப்பட விழாவை காண தமிழ் நாடு முழுவதும் இருந்து திரை ஆர்வ லர்கள் கலந்து கொள்ளுகின்றன. உலகத் திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படமான ஜமா, கற்பரா மற்றும் ரயில் உள்ளிட்ட படங்கள் மற்றும் இந்தியா, ரஷியன், அமெரிக்கா, பாலஸ் தீனம், இத்தாலி, பாகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற திரைப்படங்கள் உட்பட மொத்தம் 22 படங்கள் திரையிடப்படுகின்றன. தின மும் காலை 9 மணிக்கு, முதல் நாள் திரையிடல் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகிறது. எனவே கலை இலக்கிய ஆர்வலர்கள், சினிமா ஆர்வ லர்கள் 5 நாட்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது வர வேற்பு குழு தலைவர் ஐ.வி.நாகரா ஜன், அமைப்பின் மாவட்ட தலைவர் மு. சௌந்தரராஜன், செயலாளர் ஜீ.வெங்க டேசன் மற்றும் வரவேற்பு குழு நிர்வாகி கள் உடனிருந்தனர்.