தஞ்சாவூர், ஜூன் 16-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் மாடியில் செயல்பட்டு, நீண்ட நாட்க ளாக மூடப்பட்டு கிடந்த ஆதார் சேவை மையம் கடந்த ஜூன் 1 முதல் வட்டாட்சியர் அலுவலகம் முகப்பில் தரைத்தளத்தில் இயங்கி வருகிறது.
முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் மாடிக்குச் செல்ல சிரமமாக இருப்ப தாக எழுந்த புகாரின் பேரில், தற்போது தரைத்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதே நேரம் புதிய ஆதார் சேவை மையம், ஏற்கனவே வாகன நிறுத்துமிடத்திற்காக அமைக் கப்பட்டுள்ள தகர செட் கொட்டகையில் இயங்கி வருகிறது.
தற்போது பேராவூரணி பகுதியில் கோடை வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தி வரும் நிலையில், முதிய வர்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், கடும் புழுக்கத்தில் ஆதார் சேவை மையத்தில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
அஞ்சல் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையமும், தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், பொது மக்கள் வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு அதிக அளவில் படையெடுத்து வருகின்ற னர். இதன் காரணமாக அங்கு நெரிசல் நிலவுகிறது. மேலும், ஆதார் சேவை மையத்தின், தகர சீட் வெப்பத் தின் தாக்கத்தால், அங்கு பொதுமக்கள் காத்திருக்க முடியாத நிலை உள்ளது.
மின்விசிறியும் அமைக்கப் படவில்லை. மேலும், சுற்றிலும் அடைக்கப்பட்டி ருப்பதால் காற்றோட்டம் இல்லாமல் குழந்தைகள் மயங்கி விழும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வும், பொதுமக்கள் நலனை பேணவும், கோடை வெப்பத் தின் தாக்கம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நிக ழும் முன்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.